ஹரியானாவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் திருட்டு

சண்டிகர்: ஹரியானாவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிய நபர் அதனை காவல் நிலையத்திற்கு அருகே விட்டுச்சென்றார். ஹரியானா மாநிலம் ஜிங் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 1270 டோஸ் கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசிகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜிங் காவல்நிலையத்தின் வெளியே உள்ள டீக்கடையில் ஒரு பாலித்தீன் பை கிடந்துள்ளது. காவல்துறையினர் அதனை திறந்து பார்த்த போது ஏராளமான கொரோனா தடுப்பூசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதனுடன் இருந்த குறிப்பில் மன்னித்துவிடுங்கள், மருத்துவமனையில் தான் திருடியது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது என்று எழுதப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தினமும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் சூழ்நிலையில் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் விலையேற்றம், ஆக்சிஜன் வேறு மாநிலங்களுக்கு திருடப்படுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: