மும்பை : கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக தனது விலை உயர்ந்த காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி விநியோகிக்கும் மும்பை இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், நோயாளிகள் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர்.இந்த நிலையில் மும்பை மலட் பகுதியைச் சேர்ந்த ஷாஹ்னாவாஸ் ஷேக், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் நோயாளிகளுக்கு தம் சொந்த செலவில் வாங்கி கொடுத்து வருகிறார்.