சென்னை : தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி என்ற தமிழக அரசு அறிவிப்பை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.