“எடப்பாடி அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு அளிக்கும்”: ப.சிதம்பரம் ட்வீட்!

சென்னை : தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி என்ற தமிழக அரசு அறிவிப்பை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 18-44 வயது மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்படும், இதற்கான செலவைத் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.இந்த நல்ல திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களை எப்படிப் பெறுவது என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முன் வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்

Related Stories: