ஆக்சிஜன் கசிவால் 24 பேர் பலியான நிலையில், கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 13 பேர் பலி : மராட்டியதில் அடுத்தடுத்த சோகம்!!

மும்பை : மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் அருகே வசாயில் விஜய் வல்லாப் என்னும் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

மேலும் பலர் காயமடந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் இறந்தவர்களின் சடலங்களை மீட்ட போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அத்துடன் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவு காரணமாக, 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: