சென்னை: அதிமுக அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த முதல்வர் வேட்பாளர் அறிவித்த நிகழ்ச்சியில், கொரோனா விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதை அரசு கண்காணிக்கவும் அறிவுறுத்தினர்.