சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளிக்க 1000 செவிலியர்களை உடனடியாக நியமிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில், சங்க தலைவர் ஏழுமலை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் தொடரும் விபத்துகளில் காயமடைந்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.