சண்டிகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகளின் தீவிர கண்காணிப்பாலும், வேட்டையாலும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கணிசமாக முடக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக அவர்கள் ஊடுருவும் அனைத்து வழிகளும் முடக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முடியாமல் தவிக்கின்றனர். இதனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கவனம் இப்போது பஞ்சாப் மாநில எல்லையை நோக்கி சென்றுள்ளது. அங்குள்ள சர்வதேச எல்லை வழயாக அந்த மாநிலத்துக்குள் ஊடுருவல் செய்யவும், ஆயுதங்களை கடத்தவும் முயற்சிகள் செய்கின்றனர்.