பெங்களூரு: கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவாஜ் பொம்மை பெங்களூருவில்நேற்று அளித்த பேட்டி வருமாறு: ஊரடங்கின் போது முன்கூட்டியே கடைகள் அடைத்து மக்கள் நடமாடுவதை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். திங்கட்கிழமை காலை 6 மணி வரை யாரும் தேவையில்லாமல் வீதிகளில் நடமாட கூடாது. அண்டை மாநிலங்களான மகராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து வருபவர்களை தடுப்பு கேட்டுகள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.