தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசின் தன்னிச்சையான, பாரபட்சமான போக்கு தொடர்கிறது. இந்த மோசமான அணுமுறையால் நிலவரம் இன்னும்
மோசமடையும்.
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
பாஜவில் ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற முழக்கம் ஒலிக்கிறது. ஆனால், மக்களின் உயிரை காப்பாற்றும் தடுப்பு மருந்துக்கு ஏன் ஒரேவிலை நிர்ணயிக்கவில்லை.
- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவையில்லை. அத்தகைய முயற்சிகளுக்கு தமிழக அரசு இடம் தரக்கூடாது.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கொரோனாவிலும் மக்களை கொள்ளையடிக்க கார்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டுவது நியாயமா?
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்