புதுச்சேரியில் பால் வினியோகம் செய்யும் பூத்துகளில் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் விற்பனை !

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் வினியோகம் செய்யும் பூத்துகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு முகக்கவசம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றது. புதுச்சேரியில நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று உச்சத்தை தொட்ட கொரோனா ஒரே நாளில் 987 பேருக்கு தொற்று உறுதியாகி 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனாவை கட்டுடப்படுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமுடக்கம், இரவு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு விதித்துள்ளது அதில் முகக்கவசமின்றி யாரும் வெளியில் வரக்கூடாது என அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: