×

பஞ்சாப்பை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்; பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் வார்னர் பாராட்டு..!

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நேற்று மாலை நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 19.4 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் 18.4 ஓவரில் 121 ரன் எடுத்து முதல் வெற்றியை ருசித்தது. வெற்றிக்கு பின் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது: இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

பந்துவீச்சாளர்கள் எதிரணியை வீழ்த்த அருமையான வேலை செய்தனர். பேர்ஸ்டோவ் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடுகிறார். அபிஷேக் ஒரு இளைஞன், இந்த பருவத்தில் இன்னும் நிறைய பந்து வீசச் சொன்னோம், அவர் அதைச் செய்தார். நாங்கள் செல்லும் வரை, அவர் முதல் ஓவரை வீசுவது அவருக்குத் தெரியாது. 3 போட்டிகளில் தோல்வி பற்றி அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. மீண்டும் இங்கே புதிதாக தொடங்குவது பற்றி தான் யோசித்தோம், என்றார்.

Tags : Sunrisers ,Punjab ,Warner , Sunrisers beat Punjab; The bowlers performed well: Captain Warner praise ..!
× RELATED நிதிஷ் குமார் ரெட்டி அதிரடி அரைசதம்:...