பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி மலைக்காடு பகுதியில் இளைஞர்களால் வளர்க்கப்பட்ட 8 வேப்பமரங்களை விறகுக்காக வெட்டிய பெண்ணிடம் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி மலைக்காடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து, வீதியோரம் வேப்ப மரக்கன்றுகளை நட்டு, வளர்ந்து வந்தனர். தற்போது அவை வளர்ந்து நிழல் தரும் மரங்களாக மாறிய நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், 8 மரங்களை வெட்டி விறகு கடைக்கு விற்பனை செய்துள்ளார்.