கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் !

சென்னை: கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் பழனிசாமி, அமைச்சர் வேலுமணி ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக முதல்வர், வேலுமணிக்கு எதிராக திமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி, சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு நீரிழிவு பிரச்சனை இருந்ததால் மேல் படுக்கையில் நிலை தடுமாறி ஒரு பெண் மீது விழுந்தார்.

இதனையடுத்து, ரயில்வே காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண், வாய்மொழியில் புகார் அளித்தார். இந்த நிலையில், தனது செயல்பாடுகளில் உள்நோக்கம் இல்லை. நீரிழிவு பிரச்சனை இருந்ததால் அவசரமாக இறங்கியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 நாட்கள் கழித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கும் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக முதல்வர், வேலுமணிக்கு எதிராக திமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  தனக்கு இழப்பீடாக ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் பழனிசாமி, அமைச்சர் வேலுமணி ஆகியோர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், முதல்வர், வேலுமணி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: