கோவை: கோவையில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் உதயம்பூர் சுற்றுவட்டாரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக அம்மாநில தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச் 28ஆம் தேதி சந்தேகத்திற்குரிய இடத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோவையை சேர்ந்த பிரியன்லால் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 95,000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பிடிப்பட்டவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.