தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!

தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.முகப்பொலிவு சிகிச்சையை தவறாக செய்துள்ளதாக கூறி மருத்துவர் பைரவி செந்திலிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நடிகை ரைசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகப்பொலிவு பெறாமல் ரத்த கசிவு ,வீக்கம் தான் ஏற்பட்டது,உதவி மருத்துவர் அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் பைரவி அளித்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 நாளில் இழப்பீடு தராவிடில் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நடிகை ரைசா வில்சன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Related Stories: