பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி.காலனி 15வது தெரு பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (எ) அஜய்(21), இவர் மீது வியாசர்பாடி எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் சஞ்சய் அவரது நண்பர் ஹரிஹரன்(21) என்பவருடன் சேர்ந்து வியாசர்பாடி 30வது தெரு பகுதியில் கத்தியை வைத்து ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டினார். இதை கண்ட அங்கிருந்த பெண்கள் ஒன்று கூடி கற்களால் சஞ்சயை சரமாரியாக தாக்கினர்.