சொல்லிட்டாங்க...

* கல்வித் துறையில் காவி சித்தாந்தத்திற்கு பாதை அமைக்கும் பாசிசப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாதிய படுகொலை அதிகமாக நடக்கிறது. தமிழகத்தை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவிக்க வேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்

* கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழு சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

* மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. தமிழக மருத்து வமனைகளில் இத்தகைய துரதிருஷ்ட நிகழ்வுகள் நிகழ்ந்து விடாமல் தடுக்க பாதுகாப்பு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: