சென்னை: தமிழக அரசின் நிர்வாகத்தை கலந்தாலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலினை எந்த காரணத்திற்காகவும் ஏற்கமுடியாது.