தரைமட்ட கிணறால் விபத்து அபாயம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சுகம் காலனி அருகே உள்ள தரைமட்ட கிணறால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி 15ம் வார்டில் அஞ்சுகம் காலனி அருகே உள்ளது கூட்டுறவு நகர். இப்பகுதியில் தரைமட்டத்தில் பயன்பாடற்ற பாசன கிணறு உள்ளது.  கிணற்றை சுற்றிலும் தடுப்புச்சுவர் இல்லாததுடன், அப்பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு, கிணற்றை சுற்றிலும் தடுப்பு சுவர் கட்டுவதுடன், புதர்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: