சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சுகம் காலனி அருகே உள்ள தரைமட்ட கிணறால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி 15ம் வார்டில் அஞ்சுகம் காலனி அருகே உள்ளது கூட்டுறவு நகர். இப்பகுதியில் தரைமட்டத்தில் பயன்பாடற்ற பாசன கிணறு உள்ளது. கிணற்றை சுற்றிலும் தடுப்புச்சுவர் இல்லாததுடன், அப்பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது.