ராய்ப்பூர்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்பதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. மக்களின் உயிர் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் உறுதியளித்துள்ளார். மத்திய அரசு போதிய அளவிலான கொரோனா தடுப்பூசிகளை வழங்க சத்தீஸ்கர் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.