போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் 2வது நாளாக கொள்ளையடித்து சென்றது அம்மாநில அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் தாமோ மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்பது குற்றச்சாட்டாகும். இந்நிலையில், அரசு தரப்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை கொள்ளையடித்து சென்றனர். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்வதறியாது திகழ்ந்து நின்றனர்.