திருவண்ணாமலை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை ஒவ்வொரு மாதமும் பெர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெறும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பெளர்ணமி கிரிவலத்தில் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் தற்போது வரை கிரிவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.