நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட விபத்தில் 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஜாகிர் உசைன் மருத்துவமனையில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும்போது கசிவு ஏற்பட்டது. இந்த கசிவானது 30 நிமிடங்கள் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நாசிக் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.