சென்னை: ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்புகளின் கழிவு நீரும், தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளும் ஓடைகளில் கலந்துவிடப்படுகின்றன. இதன் விளைவாக மழைக்காலங்களில் ஆற்றில் நீர் ஓடும்போது மாசடைந்த தண்ணீர் குளங்களை நிரப்புகிறது.