வேலூர் : கொரோனா கால தடையை மீறி பொய்கை மாட்டுச்சந்தையில் 20க்கும் மேற்பட்ட மாட்டு வியாபாரிகள் கால்நடைகளுடன் வந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.வடமாவட்டங்களில் பிரசித்தமான வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு கொரோனா பரவல் காரணமாக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை விதிக்கப்பட்டு முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று 20க்கும் மேற்பட்ட வெளியூர் வியாபாரிகள் மாடுகளுடன் வந்தனர்.