சென்னை தரமணியில் தயாராகும் 13வது கொரோனா சிகிச்சை மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை தரமணியில் தயாராகும் 13வது கொரோனா சிகிச்சை மையத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கொரோனா அதிகரிப்பால் சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் 900 படுக்கை வசதிகளுடன் கூடிய மையத்தில் முதல்கட்டமாக 250 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.  கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதுதான் முக்கிய இலக்கு என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: