பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,481 பேர் மரணம் : உலக அளவில் இதுவரை 30.56 லட்சம் பேர் உயிரிழப்பு!!

ஜெனீவா,சீனாவின் உகான் நகரில்  கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.   கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.56- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்  பாதிப்புடன் 1.85- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.09- லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 57,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,25,33,935 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு 860 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு பலியானோர் மொத்த எண்ணிக்கை 582,433 பேராக அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 73,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,40,50,885 பேராக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,481 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 3,78,530 பேராக உயர்ந்துள்ளது.

Related Stories: