27 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு கொரோனாவுக்கு 10,986 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 48 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகமாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,01,329 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் 10,986 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 3,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 79,804 ஆக உயர்ந்துள்ளது. 6,250 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 48 பேர் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 17 பேர் நேற்று உயிரிழந்தனர். நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு 1029, கோவை 686, காஞ்சிபுரம் 295, திருவள்ளூர் 508, திருவண்ணாமலை 102, திருவாரூர் 120, தூத்துக்குடி 170, திருநெல்வேலி 269, திருப்பூர் 216, திருச்சி 312, வேலூர் 213, விருதுநகர் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: