மும்பை: தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை தனது உயிரை துச்சமென நினைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டு குவிகி்றது. மத்திய ரயில்வே மும்பை டிவிஷனில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேன் ஆக பணியாற்றுபவர் மயூர் ஷெல்கே. கடந்த 17ம் தேதி இவர் பணியில் இருந்தபோது, பிளாட்பாரம் 2ல், பார்வையற்ற தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 6 வயது குழந்தை, திடீரென நிலை தடுமாறி ரயில்வே டிராக்கில் விழுந்து விட்டது. அந்த நேரத்தில் புறநகர் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து பதறிய மயூர் ஷெல்கே, தண்டவாளத்தில் ஓடிச் சென்று அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் ஏறிவிட்டார். ரயில் வருவதற்கு ஒரு சில நொடிகளுக்குள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி விட்டார்.