முர்ஷிதாபாத்: கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு குறைந்த பிறகு வெளிச்சந்தை விற்பனைக்கு பிரதமர் மோடி அனுமதித்து உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்ற்ம்சாட்டி உள்ளார். அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இம்மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போதுமான கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காமல் போராடிக் கொண்டு இருந்த நேரத்தில், தனது நற்பெயரை வளர்த்து கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி கொரோனா தடுப்பு மருந்துகளை பரிசாக அனுப்பி வைத்தார்.