திருவேங்கடம்: திருவேங்கடம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் இறந்த நிலையில் அவரது மனைவியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார். சாவிலும் இணை பிரியாத தம்பதியின் பாசத்தை எண்ணி உறவினர்கள் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள குலசேகரன்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவர் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜிஜிபாய் (68) ஆசிரியையான இவரும், குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு பாலமுருகன், சிவகுமார், சந்திரசேகர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் பாலமுருகன், ஜமீன்தேவர்குளம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் சிவகுமார், ஊரில் விவசாயம் செய்து வருகிறார். சந்திரசேகர், தர்மபுரியில் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை சண்முகவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை திருவேங்கடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.