பாரிஸ்: வரும் மே மாதம் நடைபெற உள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடுவேன் என்று ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் உறுதி தெரிவித்துள்ளார். முன்னாள் நம்பர் 1 வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், கொரோனா பரவலின் போது, கிடைத்த ஓய்வில் அடுத்தடுத்து 2 முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் கிட்டத்தட்ட 18 மாதங்கள் அவர், டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள அவர், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் பங்கேற்கவில்லை.