தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து செல்லும் புலம்பெயர் தொழிலார்களுக்காக கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிருவாகம் தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நாக்பூர்,சந்திராகச்சி செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. சந்திராகச்சி செல்லும் ரயில்கள் ஏப்ரல் 22-ம் தேதி மற்றும் 26-ம் தேதிகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதுவையில் இருந்து ஹவுரா செல்லும் சிறப்பு ரயிலிலும் கூடுதலாக ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் சிறப்பு ரயிலில் இரண்டு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரயில்கள் இன்று முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: