உதகை: உதகையில் படகு இல்லத்தில் தற்காலிக படகு ஓட்டுனர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் படகு இல்லம் மூடப்பட்டதால் தங்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை கேட்காமல் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.