சென்னை: ஆற்று நீரை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்துக் கொள்ள கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைமடை பகுதி மக்களுக்கும் தூய்மையான நீர் சென்றடைய வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. நதிநீர் மாசடைவதை தடுப்பதற்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.