கம்பம் : கம்பத்தில் உள்ள கம்பராயப்பெருமாள் கோயில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கம்பத்தில் பிரசித்தி பெற்ற கம்பராயப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. நேற்று மாலை கம்பத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சிவன் கோயில் கொடிமரம் அருகே இருந்த தென்னை மரத்தின் உச்சியில் தீப்பிடித்தது.