அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மராட்டியம் வித்ர்பா முதல் தமிழகம் வரை 1.5 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி வெப்பச் சலனத்தால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்க வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories: