சென்னை: புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தியேட்டர்களில் தொடர்ந்து திரைப்படங்களை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். திரையரங்க சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காணொலி வாயிலாக கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து, நேரங்களை மாற்றி அமைக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிய திரைப்படங்கள் வெளியாகாத சூழலில் திரையரங்குகளை மூடி விடலாமா? அல்லது நேரங்களை மாற்றி அமைக்கலாமா? என்ற குழப்பம் நீடித்து வந்தது.