தஞ்சை: ரூ.63 கோடி நிலுவை தொகையை வழங்கக் கோரி தஞ்சை குருங்குளம் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நடப்பாண்டு அண்ணா சர்க்கரை ஆலைக்கு வழங்கிய கரும்புக்கு ரூ.25 கோடி இதுவரை வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் பழைய நிலுவைத் தொகை ரூ.63 கோடி வழங்கவில்லை என விவசாயிகள் புகார் அளித்தனர்.