சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றி தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். டிஜிபி திரிபாதி, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.