டெல்லி: கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர், டிஆர்டிஓ தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசிக்கிறார். ராணுவத்துக்கு சம்பந்தமான வாகனங்களை முழுஅளவில் கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.