திமுக தொண்டரின் மகள் கொடூரமான முறையில் கொலை குற்றவாளிகள் தப்பிவிடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: உளுந்தூர்பேட்டை தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த திமுக தொண்டர்  வீரமணியின் மகள் சரஸ்வதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள்  எவரும் எந்த வழியிலும் தப்பிவிடாதவாறு கடுமையான நடவடிக்கையைக் காவல்துறை  எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்: உளுந்தூர்பேட்டை தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் வீரமணியின் மகள் சரஸ்வதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் எவரும் எந்த வழியிலும் தப்பிவிடாதவாறு கடுமையான நடவடிக்கையைக் காவல்துறை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் சகோதரியின் படிப்புச் செலவை மாவட்டக் கழகம் ஏற்கும் எனவும் சொல்லி இருக்கிறோம். வழக்கை நேர்மையாகவும் உறுதியாகவும் காவல்துறை நடத்த வேண்டும். மன்மோகன் நலம் பெற வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் நல்ல உடல்நலம் பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அறிந்து வருந்துகிறேன். அவர் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நல்ல உடல்நலம் பெற விழைகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: