சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டலமேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக நேற்று ராசிபுரத்தில் 30மிமீ மழை பெய்துள்ளது. ஒட்டப்பிடாரம், பெரியாறு 20மிமீ, ஆண்டிப்பட்டி, தக்கலை, சங்ககிரி, தேக்கடி, பெருஞ்சாணி அணை 10 மிமீ மழை பெய்துள்ளது. நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்டுள்ள வளி மண்டலமேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சியால், நீலகிரி,கோவை, தென்காசி, சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.