டெல்லி: நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில் வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.