சென்னை: கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாக மத்திய அரசு அறிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியிடப்பட்ட தகவல் பீதியை அதிகரிக்கச் செய்தது.இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதில் வார இறுதி ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பகல் நேரங்களில் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அடங்கும்.