மும்பை : இந்தியாவில் கொரோனா பரவல் 2ம் அலை இன்றைய பங்குச் சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸில் காலையில் வர்த்தகம் தொடங்கிய உடனேயே வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் மளமளவென சரிய தொடங்கின. குறிப்பாக இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கிகளின் பங்குகள் குறைந்தன. அத்துடன் ஏற்கனவே லாபத்தில் பங்குகளை விற்பனை செய்து இருந்த சன் பார்மா, டிசிஎஸ், டாக்டர் ரெட்டிஸ், இன்போசிஸ் மற்றும் எச்சிஎல் டெக்னோலஜி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி கண்டன.