சிங்கம்புணரி : சிங்கம்புணரி அம்பேத்கர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல் உள்ளது. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை வழியாக பெரியார் நீட்டிப்பு கால்வாயை அடைகிறது. இதனால் சாலையோரங்களில் கழிவுநீர் குளம் போல் தேங்கி கொசுக்கடியால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.