சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டதற்கு பின்பும் சென்னை திரும்பி கொரோனா தடுப்பு நடவடிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஆலோசனையில் முதல்வர் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். அப்போது இருந்தே அவர் லேசாக சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே உடல் சோர்வின் காரணமாக இருந்த நிலையில் இன்று காலை வயிற்று வலி சற்று அதிகமானதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சை பெறுவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் அருகாமையில் இருக்க கூடிய எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.