×

இந்தியாவில் கொரோனா புதிய உச்சம்.. 2,73,810 பேர் பாதிப்பு; 1,619 பேர் மரணம் : மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் மோசமாகும் நிலை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.78 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1. 50 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,73,810 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,619 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 19,29,329 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : Corona ,India ,Maharashtra, Tamil Nadu , India, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...