பெரம்பூர்: கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 5வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஹேமகுமார் (64). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கட்டுமான பணி நடக்கும் இடத்தை ஹேமகுமார் பார்வையிட சென்றார். அப்போது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த மின் மோட்டார் அருகே வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவர் அருகில், மின் வயர்கள் கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சேமகுமார், உடனே கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.